கொரோனா தடுப்பூசி


கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 July 2021 6:07 PM GMT (Updated: 29 July 2021 6:07 PM GMT)

காங்கேயம், முத்தூர் பகுியில் 820 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

காங்கேயம்
காங்கேயம், முத்தூர் பகுியில் 820 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி
 காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி ஆலாம்பாடி ஊராட்சி, கல்லேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 140 பேருக்கும், சிவியார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 140 பேருக்கும், பொத்தியபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 110 பேருக்கும், காங்கேயம் நகரம், பாரதியார் வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 170 பேருக்கும், மொத்தம் 560 பேருக்கு நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

முத்தூர் 
முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் செங்கோடம்பாளையம், மூத்தாம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளிகளில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் முத்தூர் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், துணை சுகாதார செவிலியர் கலந்து கொண்டு செங்கோடம்பாளையம் அரசு பள்ளியில் 100 பேருக்கும், மூத்தாம்பாளையம் 150 பேருக்கும் என  முதல் மற்றும் 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தினர். இதன்படி 2 அரசு பள்ளிகளிலும்  மொத்தம் 260 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Next Story