புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2021 6:08 PM GMT (Updated: 29 July 2021 6:08 PM GMT)

இளையான்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இளையான்குடி,

இளையான்குடி போலீசார் பஜார் பகுதி கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அப்துல்அசீஸ்(வயது 47) என்பவரது கடையில் சோதனையிட்ட போது 15 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இதே போல பெரும்பச்சேரி கிராமத்தில் சக்தி(50) என்பவரது கடையில் சோதனையிட்ட போது 10 புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.


Next Story