சேலம் மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனா 3 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
x
தினத்தந்தி 29 July 2021 8:38 PM GMT (Updated: 29 July 2021 8:38 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியானார்கள்.

சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 92 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 56 பேரும், ஆத்தூர் பகுதிகளில் 17 பேரும், நகராட்சி பகுதிகளில் 8 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 161 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 1,270 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த மூதாட்டி உள்பட 3 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பலியாகினர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,547 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story