மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்; 2 பேர் கைது


மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2021 8:52 PM GMT (Updated: 30 July 2021 8:52 PM GMT)

மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் காரைப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடக்கரையில் இருந்து மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட அரியலூரை சேர்ந்த சாமிநாதனின் மகன் பிரபு, பெரியார் நகரை சேர்ந்த கலைச்செல்வனின் மகன் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story