புதுச்சேரியில் திரையரங்குகள் மற்றும் மது பார்களை திறக்க அனுமதி


புதுச்சேரியில் திரையரங்குகள் மற்றும் மது பார்களை திறக்க அனுமதி
x
தினத்தந்தி 31 July 2021 3:58 PM GMT (Updated: 31 July 2021 3:58 PM GMT)

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

புதுவை,

புதுச்சேரியில் தினசரி கொரோனா  பரவல் 100-க்கு கீழ் குறைந்ததையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய தளர்வுகளின்படி, கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்தலாம்.  சுற்றுலாத் தலங்களில் கொரோனா தடுப்பு விதிகளுடன் 50% பேர் வரை அனுமதிக்கலாம். மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story