வேலைக்கு செல்லாமல் இருந்தவர் தற்கொலை


வேலைக்கு செல்லாமல் இருந்தவர் தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2021 6:23 PM GMT (Updated: 31 July 2021 6:23 PM GMT)

வேலைக்கு செல்லாமல் இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள பிரதட்சணம் சாலையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 45). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த பாஸ்கர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வந்து பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story