24 பேருக்கு கொரோனா


24 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Aug 2021 5:04 PM GMT (Updated: 2 Aug 2021 5:04 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்ேபாது ஒருவாரத்திற்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 286 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 48 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.


Next Story