போக்குவரத்து விதி மீறல்; 1008 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதி மீறல்; 1008 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Aug 2021 6:04 PM GMT (Updated: 2 Aug 2021 6:04 PM GMT)

போக்குவரத்து விதி மீறல்; 1008 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம்
ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு சிவப்பு விளக்கு ஒளிரும் போது கடந்து சென்றதாக 5 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 57 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 723 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றி சென்றதாக 6 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 9 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 144 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாத 36 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 28 பேர் மீதும் என மொத்தம் 1008 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கொரோனா பரவிவரும் நிலையில் அரசின் உத்தரவினை மதிக்காமல் முககவசம் அணியாமல் சாலைகளில் சென்றதாக 60 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Next Story