விபத்தில் தொழிலாளி சாவு


விபத்தில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 Aug 2021 4:42 PM GMT (Updated: 3 Aug 2021 4:42 PM GMT)

திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55) தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தெக்கூர் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். வஞ்சினிப்பட்டிக்கு திரும்பிய போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், இவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒழுகமங்கலத்தை சேர்ந்த பிரேம்குமார்(20), அவரது நண்பர் சந்தோஷ் ஆகியோரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். விபத்தை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் பழனிசாமியை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்ற 2 பேரையும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பழனிசாமி பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெற்குப்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story