கொரோனாவுக்கு முதியவர் சாவு; 26 பேருக்கு தொற்று


கொரோனாவுக்கு முதியவர் சாவு; 26 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 3 Aug 2021 6:31 PM GMT (Updated: 3 Aug 2021 6:31 PM GMT)

கொரோனாவுக்கு முதியவர் இறந்தார். புதிதாக 26 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 268 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 43 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 89 வயதான முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.


Next Story