பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம்


பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Aug 2021 9:31 PM GMT (Updated: 3 Aug 2021 9:31 PM GMT)

பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பேரளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனால், பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்வாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், வாலிகண்டபுரம், செங்குணம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story