கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு


கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2021 5:33 PM GMT (Updated: 4 Aug 2021 5:33 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை, ஆக.5-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியானது.
42 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்தது. தினமும் சராசரியாக 20 முதல் 25 வரை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அரசின் சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 39 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 568 ஆக உயர்ந்தது.
ஒருவர் சாவு
கொரோனாவுக்கு தற்போது 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா 3-வது அலை உருவாக கூடும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story