கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Aug 2021 5:42 PM GMT (Updated: 4 Aug 2021 5:42 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 29245 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 29 ஆயிரத்து 199 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 ஆயிரத்து 579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 198 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 400 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 46 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 199-ல் இருந்து 29 ஆயிரத்து 245-ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 468 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story