வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 4 Aug 2021 8:31 PM GMT (Updated: 4 Aug 2021 8:31 PM GMT)

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி, 
சிவகாசி மாத்தி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி (வயது 68). இவரது மகன் சிவபாலன் அபுதாபியில் வேலை செய்து வருகிறார். அதனால் சிலோன்காலனியில் உள்ள சிவபாலன் வீட்டிற்கு அவ்வப்போது ஆறுமுகச்சாமி தனது மனைவியுடன் வந்து தங்கி விட்டு செல்வது உண்டு. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகச்சாமி தனது வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் நேற்று முன்தினம் தனது மகன் சிவபாலன் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகச்சாமி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் 18 கிராம் நகைகளும், ரூ.15 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story