குளிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு


குளிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 4 Aug 2021 8:41 PM GMT (Updated: 4 Aug 2021 8:41 PM GMT)

விருதுநகர் அருகே குளிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர், 
விழுப்புரத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 55). இவர் விருதுநகர் பாண்டியன் நகரில்உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தினருடன் வந்திருந்தார். சம்பவத்தன்று கருப்பசாமி நகரில் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற ஜோதி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். தீயணைப்பு படையினர் கிணற்றில் இருந்து ஜோதியின் உடலை மீட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story