சேலம் மாவட்டத்தில் புதிதாக 79 பேருக்கு தொற்று 128 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் 4 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் புதிதாக 79 பேருக்கு தொற்று 128 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் 4 பேர் பலி
x
தினத்தந்தி 5 Aug 2021 8:42 PM GMT (Updated: 5 Aug 2021 8:42 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 128 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் 83 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 பேர், நங்கவள்ளியில் 9 பேர், சங்ககிரியில் 8 பேர், ஓமலூரில் 5 பேர், காடையாம்பட்டி மற்றும் தலைவாசலில் தலா 3 பேர், ஆத்தூரில் 4 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 128 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 900 பேர் தொடர்ந்து நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,572 பேர் பலியாகி உள்ளனர்.


Next Story