வாலிபர் படுகொலை; நண்பர்களுக்கு வலைவீச்சு


வாலிபர் படுகொலை; நண்பர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Aug 2021 9:02 PM GMT (Updated: 5 Aug 2021 9:02 PM GMT)

குடிபோதையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

பாகல்கோட்டை: பாகல்கோட்டை மாவட்டம் காலடகி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முரநாலா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 28). இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே புறப்பட்டு சென்றார். ஆனால் நள்ளிரவு வரை ரமேஷ் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை, குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலையில் காலடகி பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ரமேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் காலடகி போலீசார் விரைந்து வந்து ரமேசின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து ரமேஷ் மதுஅருந்தியது தெரியவந்தது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரமேசை, அவரது நண்பர்களே அடித்து படுகொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காலடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட ரமேசின் நண்பர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story