காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை


காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Aug 2021 9:40 PM GMT (Updated: 7 Aug 2021 9:40 PM GMT)

மண்டியா அருகே திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மண்டியா: மண்டியா அருகே திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்திற்கு எதிர்ப்பு

மண்டியா தாலுகா ஹம்பாபுரா கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மைனர் பெண். இவருக்கு, இதே கிராமத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த ஓராண்டாக 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும், திருமணம் செய்து கொள் முடிவு செய்தனர். 2 பேரும் தங்களது காதலை வீட்டில் கூறியுள்ளனர். 

ஆனால் 2 பேரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். இதனால் காதல் ஜோடிகள் மனமுடைந்தனர். மேலும் தங்களது உயிரை மாய்த்து கொள்ளவும் முடிவு செய்தனர். 

தற்கொலை-பரபரப்பு

அதன்படி காதல் ஜோடி ஹம்பாபுரா கிராமம் அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கேரகோடு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சாதியை காரணம் காட்டி இருவீட்டினரும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்து காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கேரகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story