ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு


ஆடி  அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 8 Aug 2021 4:59 PM GMT (Updated: 8 Aug 2021 4:59 PM GMT)

ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தர்மபுரி:
ஆடி  அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆடி  அமாவாசை
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆடி  அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களில் சாமி தரிசனம் செய்ய  பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
தர்மபுரி எஸ்.வி. ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் ஆடி மாத அமாவாசையையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வடமாலை சாத்தி சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சாமி கோவில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கவில்லை.
வே.முத்தம்பட்டி கோவில்
வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி  அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி  மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையுடன் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குப்புசெட்டிபட்டி வீரஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Next Story