நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 8 Aug 2021 6:27 PM GMT (Updated: 8 Aug 2021 6:28 PM GMT)

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்,

நாமக்கல் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் தியாகராஜன் (வயது 24). பி.எஸ்சி. பட்டதாரி. நேற்று முன்தினம் மாலை நாமக்கல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் போது கருங்கல்பாளையம் பகுதியில் திடீரென மின்சாரம் தடைபட்டது.
எனவே தியாகராஜன் தனது வீட்டில் யு.பி.எஸ். பேட்டரி மூலம் மின் இணைப்பை கொடுக்க முயற்சி மேற்கொண்டு உள்ளார். ஆனால் அவர் ’சுவிட்சை ஆப்’ செய்யாமல் இந்த பணியை செய்ததாக கூறப்படுகிறது. திடீரென மின்சாரம் வந்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

அவரை குடும்பத்தினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு தியாகராஜனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து ஹரிதாஸ் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story