கோவிலில் பீரோவை உடைத்து பணம் திருட்டு


கோவிலில் பீரோவை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 8 Aug 2021 7:16 PM GMT (Updated: 8 Aug 2021 7:16 PM GMT)

ஏர்வாடி அருகே கோவிலில் பீரோவை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

ஏர்வாடி:
ஏர்வாடி அருகே ஆனைகுளம் ஊருக்கு வடபுறத்தில் ஊய்காட்டு சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் களக்காடு கோவில்பத்து யாதவர் வடக்கு தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிவேல் (வயது 50) பூஜைகள் நடத்தி வருகிறார். கடந்த 30-ந் தேதி பழனிவேல் கோவில் உண்டியலை திறந்து காணிக்கை பணத்தை எடுத்தார். அதில் ரூ.5 ஆயிரம் இருந்தது. இந்த பணத்தை கோவிலில் பூஜை பொருட்கள் வைக்கும் அறையில் உள்ள பீரோவில் வைத்து விட்டு ஊருக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் மர்ம நபர்கள் கோவிலின் அறை கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோ பூட்டை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். கோவிலுக்கு பூஜை நடத்த சென்ற பழனிவேல் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story