கல்லூரி மாணவர் தற்கொலை


கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Aug 2021 9:46 PM GMT (Updated: 9 Aug 2021 9:46 PM GMT)

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் நாகப்பன். இவருடைய மகன் பிரசன்னா (வயது 20). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக தற்போது வீட்டில் இருந்து படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பிரசன்னா வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story