திருவள்ளூர் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருவள்ளூர் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Aug 2021 4:31 AM GMT (Updated: 10 Aug 2021 4:31 AM GMT)

திருவள்ளூர் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த மஞ்சா குப்பத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் குப்பம்மாள் சத்திரம் பகுதியை சேர்ந்த கீர்த்தனா (வயது 23) என்பவரை காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஏசியாஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அன்பழகனுக்கும், கீர்த்தனாவுக்கு அடிக்கடி வீட்டில் தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கீர்த்தனா திடீரென குடும்ப பிரச்சினை காரணமாக தன் அறைக்குச் சென்று உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story