காவேரிப்பட்டணம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டபோது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு


காவேரிப்பட்டணம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டபோது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு
x

காவேரிப்பட்டணம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டபோது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டபோது வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கட்டிட தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. தேங்காய் வியாபாரி. இவர், புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டுமான பணியில் மலையாளஅள்ளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சங்கர் (வயது 45) என்பவர் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் புதிய வீட்டின் மாடியில் அவர் நேற்று கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாடியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய வீடு கட்டுமான பணியின் போது தொழிலாளி தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story