கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீர் சாவு


கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 11 Aug 2021 7:32 PM GMT (Updated: 11 Aug 2021 7:32 PM GMT)

நெல்லையில் கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீரென இறந்தார்.

நெல்லை:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சிங்கராஜா (வயது 65). இவர் கண் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஒரு கண் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story