பட்டாசு ஆலையில் வெடி விபத்து


பட்டாசு ஆலையில் வெடி விபத்து
x
தினத்தந்தி 11 Aug 2021 8:08 PM GMT (Updated: 11 Aug 2021 8:08 PM GMT)

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

சாத்தூர், 
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. 
பட்டாசு ஆலை 
சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை  செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 4 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் வேலையின் போது ஏற்படும் உராய்வினால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென தீப்பிடித்தது. இதில் வேலை செய்துகொண்டிருந்த நடுசுரங்குடி சேர்ந்த  ஆரோக்கியராஜ் (வயது 38) என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 
போலீசார் விசாரணை 
தீ விபத்து ஏற்பட்ட அறை சேதமடைந்தது. உடனே தீ விபத்து குறித்து சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 
விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிரேசன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story