திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Aug 2021 7:49 AM GMT (Updated: 13 Aug 2021 7:49 AM GMT)

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க. நகர்,

சென்னை அயனாவரம் பொன்வேல்புரம் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் 2-வது மகள் ஷாலினி (வயது 19). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

ஷாலினிக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த ஷாலினி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஷாலினியின் நண்பர் ஒருவர் அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி மிரட்டி வந்ததாகவும், இதில் விரக்தி அடைந்த ஷாலினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story