வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி


வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 14 Aug 2021 6:14 PM GMT (Updated: 14 Aug 2021 6:14 PM GMT)

வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி

திருச்சி, ஆக.15-
திருச்சி பாலக்கரை கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காசிம். இவரது மகன் ஷாகீம் (வயது 6). இவர்களது வீடு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் உள்ளது. வீட்டில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததால், பலத்த காயம் அடைந்தான். உடனே அவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story