மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் யாரேனும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கிறார்களா? என போலீசார் கண்காணித்து வந்தனர். அதன்படி ராஜதானி போலீசார் நேற்று ஆண்டிப்பட்டி அருகே பாலக்கோம்பை செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மேக்கிழார்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது 27) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 211 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story