விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு


விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 17 Aug 2021 7:27 PM GMT (Updated: 17 Aug 2021 7:27 PM GMT)

விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திசையன்விளை:

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள பெத்தரங்கன் விளையை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் அரிகரன் (வயது 21). அதே ஊரைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் முத்துகிருஷ்ணன் (23). இவர்கள் 2 பேரும் திருவனந்தபுரத்தில் வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம்  அதிகாலை ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். 

அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் திசையன்விளை அருகே உள்ள கோட்டை கருங்குளம் பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்ற மின் கம்பம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அரிகரன் பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story