220 பேருக்கு கொரோனா பரிசோதனை


220 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 19 Aug 2021 1:19 AM GMT (Updated: 19 Aug 2021 1:19 AM GMT)

பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூரில் 220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூர், சித்தநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் அரசுடாக்டர் பவித்ரா தலைமையிலான மருத்துவ குழுவினர் சளி மாதிரிகளை சேகரித்தனர். 

இந்த முகாமில் 145 தொழிலாளர்கள், 75 பொதுமக்கள் என மொத்தம் 220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, வட்டார சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், மேற்பார்வையாளர் முருகதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story