கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Aug 2021 4:00 PM GMT (Updated: 19 Aug 2021 4:00 PM GMT)

பொது இடத்தை மீட்டுத்தரக் கோரி செங்கம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கம்

பொது இடத்தை மீட்டுத்தரக் கோரி செங்கம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கட்டமடுவு கிராமத்தில் தனிநபர் ஒருவர் கிராம பொது இடத்தை ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். 

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊர்பொது இடத்தை மீட்டு தர வேண்டும் எனக் கூறி கட்டமடுவு கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கட்டமடுவு- ஊத்தங்கரை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். 

மேலும் அந்த வழியாக வந்த பஸ்களையும் சிறைபிடித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

 இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story