கொரோனா பரிசோதனை முகாம்


கொரோனா பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 19 Aug 2021 7:39 PM GMT (Updated: 19 Aug 2021 7:39 PM GMT)

வெம்பக்கோட்டை அருகே கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை ஒன்றியம் எட்டக்காபட்டி ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. அப்போது தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவள்ளி சுப்புராஜ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Next Story