சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் போக்சோவில் கைது


சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 20 Aug 2021 8:08 PM GMT (Updated: 20 Aug 2021 8:08 PM GMT)

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அறங்கோட்டை கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 70). இவர் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இது பற்றி சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, சுந்தரத்தை திட்டி தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து சுந்தரம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சுந்தரத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story