இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2021 12:35 PM GMT (Updated: 22 Aug 2021 12:35 PM GMT)

திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கனகம்மாசத்திரம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி ஹரிபிரியா (வயது 19). இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகிறார்கள். தற்போது ஹரிபி்ரியா திருவள்ளூரில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். 

கடந்த சில நாட்களாக அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் ஹரிபிரியா வயிற்று வலியால் அவதிப்பட்டார். வலி தாங்க முடியாத அவர் தன்னுடைய அறைக்கு சென்று அங்கு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story