நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,517 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,517 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2021 4:41 PM GMT (Updated: 25 Aug 2021 4:41 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,517 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது.
52 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 48 ஆயிரத்து 467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 465 ஆக குறைந்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 517 ஆக அதிகரித்து உள்ளது.
538 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 38 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 514 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 465 பேர் பலியான நிலையில் 538 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும் மூன்றாம் அலையை தடுக்கும் வகையில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
======

Next Story