ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி


ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 26 Aug 2021 6:11 PM GMT (Updated: 26 Aug 2021 6:11 PM GMT)

கொரோனாவுக்கு ஒருவர் பலி

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைகிறது. நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 170 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.

மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 7,443 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 1,435 பேருக்கும் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story