மதுராபுரி உச்சி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்


மதுராபுரி உச்சி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 26 Aug 2021 6:17 PM GMT (Updated: 26 Aug 2021 6:17 PM GMT)

மதுராபுரி உச்சி கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சி வயல் பகுதியில் உச்சி கருப்பர் கோவில் உள்ளது. கும்பாபிஷேகத்ைதயொட்டி இந்த கோவிலில் யாக சாலை அமைத்து பூைஜகள் நடைபெற்றன. நேற்று காலை 10 மணிக்கு புனித நீர்த்தம் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதன்பின்னர் கோவில் விமான கலசத்துக்கும், மூலவருக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை உமாபதி சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story