ஆரோவில் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குண்டர் சட்டத்தில் கைது


ஆரோவில் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 Aug 2021 4:40 PM GMT (Updated: 27 Aug 2021 4:40 PM GMT)

ஆரோவில் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசாா் கைது செய்தனா்.

விழுப்புரம், 
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா நாவற்குளம் காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் மணி என்கிற டாம் மணி (வயது 19). இவர் மீது ஆரோவில் பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக மணியை ஆரோவில் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். 

தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story