கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 27 Aug 2021 7:55 PM GMT (Updated: 27 Aug 2021 7:55 PM GMT)

கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் சங்கரபாண்டி என்ற சங்கர் (வயது 32), நாங்குநேரி அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் முத்து சுரேஷ் (22). இவர்கள் 2 பேரும் நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் கஞ்சா விற்றதாக பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சுரேஷ்குமார், பாளையங்கோட்டை உட்கோட்டம் போலீஸ் உதவி கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) நாக சங்கர் ஆகியோர், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக் கண்ணனுக்கு பரிந்துரை செய்தனர். போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று, 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து போலீசார் சங்கரபாண்டி என்ற சங்கர், முத்து சுரேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story