திருச்செந்தூரில் கஞ்சா விற்றவர் கைது


திருச்செந்தூரில் கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 3:33 PM GMT (Updated: 30 Aug 2021 3:33 PM GMT)

திருச்செந்தூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் நேற்று திருச்செந்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டு இருந்தவர் போலீசாரை கண்டதும் ஓடினார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி சுடலை கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 29) என்று தெரியவந்தது.

அவர் விற்பனை செய்ய வைத்திருந்த 1,150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.

Next Story