திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 30 Aug 2021 4:26 PM GMT (Updated: 30 Aug 2021 4:26 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.
கொரோனா தொற்று
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 90 ஆயிரத்து 236-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 94 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 520-ஆக உள்ளது. 
ஒருவர் பலி
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 787 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 929 ஆக உள்ளது.

Next Story