விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 30 Aug 2021 5:37 PM GMT (Updated: 30 Aug 2021 5:37 PM GMT)

விஷம் குடித்து பெண் தற்கொலை

வாலாஜா

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35) வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ராஜி (32) இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் கடந்த 24-ந் தேதி தகராறு ஏற்பட்டதால் ராஜி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். 

அங்கு மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து விட்டார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜி இறந்து விட்டார். 

இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில் ராஜி இறந்துள்ளதால் அவரது சாவு குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story