கட்டிட தொழிலாளி தற்கொலை


கட்டிட தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 Aug 2021 7:58 PM GMT (Updated: 30 Aug 2021 7:58 PM GMT)

நெல்லையில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:
நெல்லை வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் மணி மகன் முருகன் (வயது 24). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்து காணப்பட்ட முருகன் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story