முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு


முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு
x
தினத்தந்தி 1 Sep 2021 7:51 PM GMT (Updated: 1 Sep 2021 7:51 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

சிவகாசி மல்லாங்கிணறு குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கரநாராயணன் நத்தம்பட்டிக்கும், திருத்தங்கல்லில் பணியாற்றும் சேரலாதன் சிவகாசிக்கும், மாவட்ட நில எடுப்பு பிரிவில் பணியாற்றும் உமா மகேஸ்வரி ஏழாயிரம்பண்ணைக்கும், ராஜபாளையத்தில் பணியாற்றும் அறிவழகன் ஆலங்குளத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். திருச்சுழியில் பணியாற்றும் அழகர்சாமி ஏ.முக்குளத்திற்கும் ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் மலர்விழி ராஜபாளையம் குறு வட்டத்திற்கும், திருச்சுழி சமூக பாதுகாப்புத் திட்டத்தில் பணியாற்றும் ஸ்டெல்லா தவமணி பந்தல்குடிக்கும், ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் தங்கபுஷ்பம் அயன்கொல்லங்கொண்டான் பகுதிக்கும், அருப்புக்கோட்டை தாலுகா பகுதியில் பணியாற்றும் ஆரோக்கிய பிரபாகரன் திருத்தங்கல்லுக்கும், சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் குருநாதன் படந்தால் பகுதிக்கும், வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் ஜோதி பிள்ளையார்குளம் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
 கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் கபீர் மல்லாங்கிணறு பகுதிக்கும் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் நிர்மலா மங்கலம் பகுதிக்கும், வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் பரமசிவம் வத்திராயிருப்பு குறு வட்டத்திற்கும், விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் ஜெயபிரகாஷ் விருதுநகர் குறுவட்டத்திற்கும், ராஜபாளையம் குறு வட்டத்தில் பணியாற்றும் அழகர்ராஜ் வத்திராயிருப்பு கோட்டையூர் குறு வட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும் மாறுதல் தொடர்பாக எந்தவித கோரிக்கை மனுவோ விடுப்பு மனுவோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.



Next Story