முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
விருதுநகர்,
கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் கபீர் மல்லாங்கிணறு பகுதிக்கும் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் நிர்மலா மங்கலம் பகுதிக்கும், வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் பரமசிவம் வத்திராயிருப்பு குறு வட்டத்திற்கும், விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் ஜெயபிரகாஷ் விருதுநகர் குறுவட்டத்திற்கும், ராஜபாளையம் குறு வட்டத்தில் பணியாற்றும் அழகர்ராஜ் வத்திராயிருப்பு கோட்டையூர் குறு வட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும் மாறுதல் தொடர்பாக எந்தவித கோரிக்கை மனுவோ விடுப்பு மனுவோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story