கொரோனாவுக்கு மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை


கொரோனாவுக்கு மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 2 Sep 2021 5:32 PM GMT (Updated: 2 Sep 2021 5:32 PM GMT)

கொரோனாவுக்கு மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனாவுக்கு மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பனகமுட்லு பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 38). இவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேட்டு உயிரிழந்தார். முனியம்மாள் தன் மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்யா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முனியம்மாள் கடந்த 25-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story