கிணற்றில் ஆண் பிணம்


கிணற்றில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 2 Sep 2021 6:06 PM GMT (Updated: 2 Sep 2021 6:06 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி, பூஞ்சோலை நகர் வழியாக பொதுமக்கள் இன்று காலை சென்றனர். 

அப்போது அங்குள்ள 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் ஆண் பிணமாக மிதப்பதை பார்த்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் இருந்து பிணத்தை மீட்க முயன்றனர்.

 ஆனால் முடியாததால் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர்  விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி பிணத்தை மீட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்

இறந்தவருக்கு 45 வயது இருக்கும். பச்சை, நீலம் கலந்த லுங்கி மற்றும் ரோஸ், வெள்ளை கலந்த சட்டை அணிந்துள்ளார் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. மேலும் இறந்தவரின் உடலில் எந்த காயங்களும் இல்லாத நிலையில்  தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story