கார் மோதி மெக்கானிக் பலி


கார் மோதி மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 2 Sep 2021 7:40 PM GMT (Updated: 2 Sep 2021 7:40 PM GMT)

கார் மோதி மெக்கானிக் பலியானார்

விராலிமலை
விராலிமலை அருகே உள்ள கசவனூர் கிராமம் குருந்தங்காலப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி.  இவரது மகன் கோபாலக்கண்ணன் என்கிற சரவணன் (வயது 38). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் விராலிமலை அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை குருந்தங்காலப்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story