விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 2 Sep 2021 7:48 PM GMT (Updated: 2 Sep 2021 7:48 PM GMT)

கல்லிடைக்குறிச்சியில் தொழிலாளி விஷம் குடித்து இறந்தார்.

அம்பை:
கல்லிடைக்குறிச்சி செட்டிபிள்ளைமார் தெருவில் வசித்தவர் ராமலிங்கம் மகன் பிரம்மநாயகம் (வயது 44). இவர் வீரவநல்லூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி யோகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக நேற்று முன்தினம் காலையில் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story