கொரோனா விதிமுறையை மீறி ஆர்ப்பாட்டம்; இந்து முன்னணி, பா.ஜனதாவினர் மீது வழக்கு


கொரோனா விதிமுறையை மீறி ஆர்ப்பாட்டம்; இந்து முன்னணி, பா.ஜனதாவினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Sep 2021 7:48 PM GMT (Updated: 3 Sep 2021 7:48 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் கொரோனா விதிமுறையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணி, பா.ஜனதா கட்சியினர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நெல்லை:
வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி அளிக்க கோரியும் இந்து முன்னணி மற்றும் பா.ஜனதாவினர் நெல்லை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் 82 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story